ஆட்டோ ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு
 விழிப்புணர்வு
திருவேங்கடத்தில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை காவல்துறையினர் வழங்கினர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடத்தில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு திருவேங்கடம் காவல்துறை கிருஷ்ணவேணி தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் விபத்துகளைத் தவிர்க்கவும், போக்குவரத்து விதிகளை கடுமையாகப் பின்பற்றுமாறு ஓட்டுமாறு கேட்டுக் கொண்டார் ,ஆட்டோ ஓட்டுபவர்கள் ஆட்டோ ஓட்டும் போது பேட்ஜ் எண்களை அணிய வேண்டும். சாலை விபத்துகளை தடுக்க குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ஆட்டோக்களில் அதிக சுமை ஏற்றுவதை சரிபார்க்க வேண்டும், என்றார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான ஆட்டோ ஓட்டுனர்களும் அப்பகுதி பொதுமக்களும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story