குறிஞ்சிப்பாடி தனியார் பள்ளியில் விழிப்புணர்வு

குறிஞ்சிப்பாடி தனியார் பள்ளியில் விழிப்புணர்வு
விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் உள்ள skv தையல்நாயகி அம்மாள் நடுநிலைப்பள்ளியில் 2023 ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடலூர் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு துறை அலுவலர் குமார் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் குறிஞ்சிப்பாடி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் சார்பில் விபத்தில் தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

குறிஞ்சிப்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர் உத்திராபதி தலைமையில் சிறப்பு நிலை அலுவலர் சிவக்கொழுந்து முன்னிலையில் தீயணைப்பு துறை வீரர்கள் பள்ளி மாணவர்கள் மத்தியில் எப்படி பட்டாசுகளை பாதுகாப்பான முறையில் வெடிக்க வேண்டும் மற்றும் பட்டாசு வெடிக்கும் பொழுது விபத்து ஏற்பட்டால் எப்படி அதனை எதிர்கொள்ள வேண்டும் ஆகிய செய்முறை விளக்கங்களை செய்து காட்டினார். மேலும் விபத்தில்லா தீபாவளியை விளக்கும் விதமாக துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டது.

Tags

Next Story