திருவொற்றியூர் : போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு மாரத்தான்

திருவொற்றியூர் : போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு  மாரத்தான்

போதை தடுக்க விழிப்புணர்வு மாரத்தான்

திருவொற்றியூர் அரிமா சங்கங்களின் சார்பில் போதைபொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு மாரத்தானில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கேடயங்கள் வழங்கபட்டன
திருவொற்றியூர், அரிமா சங்கங்களின் சார்பில், போதை பொருள் பயன்படுத்துவதை தடுக்கும் வகையில், விழிப்புணர்வு நிகழ்ச்சியாக நேற்று அதிகாலை, எண்ணுார் விரைவு சாலை, சுங்கச்சாவடி சந்திப்பில், மாரத்தான் போட்டி நடந்தது. வயதிற்கு ஏற்றாற்போல் 3, 5, 10 கி.மீ., என்ற அளவில், மூன்று பிரிவுகளாக, மாரத்தான் போட்டிகள் நடத்தப்பட்டன. இதற்காக, எண்ணுார் விரைவு சாலை முழுதும், போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. சுங்கச்சாவடி சந்திப்பில் துவங்கிய மாரத்தான், பாரதியார் நகர் சந்திப்பு வரை சென்று, மீண்டும் துவங்கிய இடத்திற்கே வந்து சேர்ந்தது. 1,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசு, கேடயங்கள் வழங்கப்பட்டன.

Tags

Next Story