100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம்

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு 

பேரணாம்பட்டு வருவாய்த்துறை நகராட்சி சார்பில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி தாசில்தார் தலைமையில் மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு வருவாய்த்துறை, நகராட்சி சார்பில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடந்தது. பேரணாம்பட்டு தாசில்தார் விாநயகமூர்த்தி தலைமை தாங்கினார். மகளிர் இயக்க உதவி திட்ட அலுவலர் கலைச் செல்வன், நகராட்சி ஆணையாளர் வேலன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நகராட்சி அலுவலகம் முன்பு தொடங்கிய ஊர்வலம் லாரி ஷெட், நெடுஞ்சாலை, நான்கு கம்பம், பஸ் நிலையம், சவுக்ரோடு வழியாக சென்றது. பின்னர் அங்கு உறுதி மொழி எடுத்து கொள்ளப்பட்டது. ஊர்வலத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார், வருவாய் ஆய்வாளர்கள் கீதா, சற்குணம். கிராம நிர்வாக அலுவலர்கள், நகராட்சி பணியாளர்கள், கிராம உதவியாளர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story