பாலியல் வன்கொடுமை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம்

பாலியல் வன்கொடுமை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம்

  திருப்பத்தூரில் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.  

திருப்பத்தூரில் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

இன்ஸ்பெக்டர் மற்றும் ஆதி திராவிட நலத்துறை அலுவலர் பங்கேற்பு! திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ராமக்காபேட்டையில் உள்ள அரசு சாரா பீட்ஸ் தொண்டு நிறுவனம் சார்பில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு திருப்பத்தூர் மகளிர் காவல் ஆய்வாளர் அன்பரசி தலைமை தாங்கினார்.

முன்னதாக பீட்ஸ் அரசு சாரா தொண்டு நிறுவன செயலாளர் ராதா அனைவரையும் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் ஜெயக்குமார், காவல் உதவி ஆய்வாளர்கள், வழக்கறிஞர் அமுதானந்தன், மற்றும் மகளிர் குழுக்களை சார்ந்த பெண்கள் என திரளாக கலந்துக்கொண்டனர். இதில் காவல் ஆய்வாளர் அன்பரசி பெண்களுக்கு எதிராக நடைபெறுகின்ற பல்வேறு குற்ற செயல்களை குறித்த அதிலிருந்து எவ்வாறு தங்களை காத்துக் கொள்வது என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது

Tags

Next Story