தேசிய டெங்கு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கூட்டம்

தேசிய டெங்கு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கூட்டம்

உறுதிமொழி ஏற்பு 

தேசிய டெங்கு தினத்தை முன்னிட்டு சாணார்பட்டி வட்டாரத்தில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு கூட்டங்கள் நடைபெற்றது.
கொசவபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு வட்டார மருத்துவ அலுவலர் அசோக் குமார் தலைமை தாங்கினார்.இதேபோல் அஞ்சுகுளிப் பட்டியில் ஊராட்சி மன்ற தலைவர் தேவி ராஜா சீனிவாசன், மருத்துவர் சதீஷ் குமார் தலைமையிலும், சட்டக்காரன்பட்டி கிராமத்தில் நடமாடும் மருத்துவ குழு மருத்துவ அலுவலர் அரவிந்த் மற்றும் சாணார்பட்டி வட்டார களஞ்சிய ஒருங்கிணைப்பாளர் காசி மீனா டேவி தலைமையிலும், கோபால் பட்டியில் ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமி தலைமையிலும் டெங்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் குறித்தும், அது பரவும் முறை, பரிசோதனை, சிகிச்சைகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினர்.

Tags

Next Story