தொகரப்பள்ளி ஊராட்சியில் ஊராட்சி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கூட்டம்

தொகரப்பள்ளி ஊராட்சியில் ஊராட்சி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கூட்டம்

விழிப்புணர்வு கூட்டம்

வெப்பத்திலிருந்து தன்னை பாதுகாத்து கொள்வது குறித்து ஊராட்சி தினத்தில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
தொகரப்பள்ளி ஊராட்சியில் ஊராட்சி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கூட்டம். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் தொகரப்பள்ளி ஊராட்சியில் ஊராட்சி தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் உமாலட்சுமி பிரபு தலைமையில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பர்கூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுசீந்தர், ஊராட்சி செயலாளர் சேகர் மற்றும் ஊர் பொதுமக்கள், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் வெப்பம் அதிகரித்து காணப்படுவதால் வெப்ப அலை காற்று வீசப்பட்டு வரும் சூழ்நிலையில் பொதுமக்கள் யாரும் அத்தியாவசியம் இன்றி வெளியே வர வேண்டாம் குறிப்பாக 12 மணி முதல் 3மணி வரை வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் அதிக நீர்ச்சத்துள்ள பொருட்களை அருந்த வேண்டும் எனவும் எடுத்துக் கூறினார்கள் கூட்டத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் நீர் மோர் இளநீர் உள்ள உள்ளிட்ட நீர்ச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டது

Tags

Read MoreRead Less
Next Story