தென்னையில் பயிா்ப் பாதுகாப்பு விழிப்புணா்வு

தென்னையில் பயிா்ப் பாதுகாப்பு விழிப்புணா்வு

தென்னையில் பயிர்ப் பாதுகாப்பு விழிப்புணர்வு

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூா் வட்டார தோட்டக்கலை, மலைப் பயிா்கள் சாா்பில் நடைபெற்ற தென்னை பயிர் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாமில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா், திண்டுக்கல், வத்தலகுண்டு, ரெட்டியாா்சத்திரம், வேடசந்தூா் வட்டார தோட்டக்கலை, மலைப் பயிா்கள் சாா்பில், தென்னையில் பயிா்ப் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. ரெட்டியாா்சத்திரம் காய்கறி மகத்துவம் மையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ஆத்தூா் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலெக்சாண்டா் தலைமை வகித்தாா். திருச்சி மத்திய ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மைய விஞ்ஞானி எஸ்.சிவராமகிருஷ்ணன், உதவி இயக்குநா் ஆா். கோவிந்தராஜ், பயிா்ப் பாதுகாப்பு அலுவலா் இ.சுருளிராஜன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டனா்.

Tags

Next Story