நெய்வேலி என்எல்சி நிறுவனம் சார்பில் விழிப்புணர்வு

நெய்வேலி என்எல்சி நிறுவனம் சார்பில் விழிப்புணர்வு

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி 

நெய்வேலி என்எல்சி நிறுவனம் சார்பில் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் நெய்வேலி என். எல். சி இந்தியா மருத்துவமனை, என். எல். சி. கல்வி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நெய்வேலியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் என். எல். சி. இந்தியா நிறுவன மனிதவளத்துறை இயக்குநர் சமீர் ஸ்வரூப் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.

இதில் நெய்வேலி பள்ளிகளை சேர்ந்த மாணவ மற்றும் மாணவிகள் கலந்து கொண்டு போதைப் பொருள் பழக்கத்திற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags

Next Story