பள்ளியில் போதைப்பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு நிகழ்ச்சி

பள்ளியில் போதைப்பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு நிகழ்ச்சி

திண்டுக்கல் அருகே பள்ளி மாணவ, மாணவிகள் போதைப்பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு நடத்தினர்.


திண்டுக்கல் அருகே பள்ளி மாணவ, மாணவிகள் போதைப்பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

காந்திகிராமத்தில் பள்ளி மாணவிகளின் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.புதன் கிழமை காலை சுமார் 11.30 அளவில் (26.06.2024) போதை விழிப்புணர்வு ஊர்வலம் திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமம் கஸ்தூரிபா சேவிகா ஆசிரமம் மற்றும் லட்சுமி கல்வியல் கல்லூரி பள்ளி மாணவிகள் மற்றும் பயிற்சி ஆசிரியர்கள்-ஆசிரியர்கள் என சுமார் 200 பேர் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

காந்திகிராமத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு அம்பாத்துரை காவல் நிலையத்தில் நிறைவடைந்தது. அம்பாத்துரை காவல் ஆய்வாளர் மீனாட்சி போதை விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களை வரவேற்று போதை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமை பற்றிய சிறப்புரை ஆற்றி, ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளுக்கு டீ, பிஸ்கட் வழங்கி சிறப்பித்தார்.

Tags

Next Story