முருக்கேரி ஆரம்ப சுகாதாரநிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

முருக்கேரி ஆரம்ப சுகாதாரநிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

உறுதிமொழி எடுத்துக்கொண்ட மக்கள்

முருக்கேரி ஆரம்ப சுகாதாரநிலையத்தில் உலக மலேரியா தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

விழுப்புரம் மாவட்டம் பிரம்மதேசம் அடுத்த முருக்கேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக மலேரியா தினத்தை முன்னிட்டு மருத்துவ அலுவலர் வரதராஜ், மற்றும் நிவேதா ஆகியோர் தலைமையில் உலக மலேரியா தினம் சிறப்பாக கடைப்பிடிக்கப்பட்டது

இதில் முருக்கேரி அரசு ஆரம்ப சுகாதர நிலையத்தில் உள்ள புறநோயாளிகளுக்கு மலேரியா கொசுப் புழு வளருமிடங்கள் மற்றும் அவற்றை ஒழிக்கும் நடவடிக்கைகள் குறித்து நேரடி விளக்கங்களுடன் விழிப்புணர்வு வழங்கப்பட்டது, மேலும் மலேரியா தின உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர்கள் ஆனந்தன், ஹர்ஷவர்த்தன்,மற்றும் சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story