பெண் கல்விக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

பெண் கல்விக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

சாயல்குடியில் பெண் குழந்தைகளின் கல்வியே நாட்டின் வளர்ச்சி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

சாயல்குடியில் பெண் குழந்தைகளின் கல்வியே நாட்டின் வளர்ச்சி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் நரிப்பையூர் ஊராட்சியை சேர்ந்த நரிப்பையூர் கிராமத்தில் உள்ள பாரத மாதா உயர்நிலைப் பள்ளியில் ரூரல் வொர்க்கர்ஸ் டெவலப்மெண்ட் சொசைட்டி மற்றும் குழந்தை உரிமையும் நீங்களும் நிறுவனம் நடத்தும். பெண் குழந்தைகளின் கல்வியே நாட்டின் வளர்ச்சி குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் குழந்தைகளின் உறுதிமொழிகள் மூலமும் கையெழுத்து பிரசாரம் வாயிலாகவும் குழந்தைகள் இடைநிற்றல் இல்லாமலும் அனைத்து பெண் குழந்தைகளும், உயர்கல்வி தொடர்ந்து படிப்போம் எனவும் உறுதி கூறினார்கள். தலைமை ஆசிரியர் க.சத்தியநாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் குழந்தைகள், ஆசிரியர்களும், ரூரல் வொர்க்கர்ஸ் டெவலப்மெண்ட சொசைட்டி பணியாளர் ஆ.புனிதா அவர்களும் கலந்து கொண்டார்கள்.

Tags

Next Story