தனியார் பள்ளி பேருந்து ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

தனியார் பள்ளி பேருந்து ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு போககுவரத்து சார்பில், கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பெரம்பலூர் துறையூர் சாலையில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக கூட்டரங்கில் தனியார் பள்ளி கல்லூரி ஓட்டுநர்களுக்கு மன அழுத்ததிலிருந்து விடுபடுவதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இ

ந்த நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர், மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும் தனலட்சுமி சீனிவாசன் இன்ஸ்டிட்யூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் அண்ட் ஹாஸ்பிடல் மருத்துவமனை மருத்துவர் பாரதி ஆகியோர் கலந்து கொண்டு, ஓட்டுனர்கள் மன அழுத்தம் இல்லாமல் வாகனத்தை இயக்கினால் தான் விபத்துக்கள் குறையும் என்றும் அதற்கான வழிமுறைகளை எடுத்து கூறினார்கள். தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக எஸ்டேட் மேனேஜர் வரவேற்புரை வழங்கிய நிகழ்சியில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த பேருந்து ஓட்டுனர்கள் 350 பேர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story