அரக்கோணத்தில் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரக்கோணத்தில் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

மாணவர்களுக்கு விழிப்புணர்வு

அரக்கோணம் அரசு பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ராணிபேட்டை மாவட்ட எஸ்பி கிரண் ஸ்ருதி உத்தரவின் பேரில் அரக்கோணம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அபர்ணா, அரக்கோணம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற தடுப்பு போக்சோ சட்டம், போதை பொருட்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு

பற்றியும், பெண்களுக்கான உதவி எண்- 181, குழந்தைகளுக்கான உதவி எண் 1098 பற்றியும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினார். இதில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினர். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story