வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி!

வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி!

விழிப்புணர்வு 

செய்யாறில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து இன்று (06.04.2024) விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 முன்னிட்டு 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து இன்று (06.04.2024) விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர் பாண்டியன் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ ,மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு தொடர் ஓட்டத்தில் கலந்து கொண்டார். மேலும் இளைஞர்களுடன் கூடைப்பந்து மற்றும் வாலிபால் விளையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.அதனைத் தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கோப்பையினை வழங்கினார்.

Tags

Next Story