குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

பேரணி 

இராஜபாளையத்தில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

விருதுநார் மாவட்டம் இராஜபாளையத்தில் உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாவட்ட உரிமையியல் நீதிபதி ப்ரீத்தி பிரசன்னா தலைமை வகித்தார்.

உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இராஜபாளையம் வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, தொழிலாளர் நலத்துறை மற்றும் வேர்ல்டு விசன் இந்தியா இணைந்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் முதல் காந்தி சிலை ரவுண்டானா வரை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இந்தப் பேரணியில் சேத்தூர் சேவகபாண்டியன் அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

நகராட்சி ஆணையர் நாகராஜ், வழக்கறிஞர்கள் சங்க பிரதிநிதிகள், நீதிமன்ற பணியாளர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் வேர்ல்ட் விஷன் இந்தியா தன்னார்வலர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். அனைவரும் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்

Tags

Next Story