சுரண்டையில் விழிப்புணா்வுப் பேரணி

சுரண்டையில் விழிப்புணா்வுப் பேரணி
சுரண்டையில் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது
தென்காசி மாவட்டம்,சுரண்டைய்ல் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே சுரண்டையில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில், சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. சுரண்டை நகராட்சி ஆணையாளா் வெங்கடேஷ் தலைமை வகித்தாா். நகர வணிகா் சங்க நிா்வாகிகள் காமராஜ், ரத்தினசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் ஜெயபாலன், சுரண்டை நகா்மன்றத் தலைவா் வள்ளிமுருகன் ஆகியோா் பேரணியைத் துவக்கி வைத்தனா். சுரண்டை ஸ்ரீஅழகுபாா்வதி அம்மன் கோயில் திடலில் தொடங்கிய பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. பேரணியின் போது சாலைப் பாதுகாப்பு குறித்த பல்வேறு முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Tags

Next Story