திருச்செங்கோட்டில் விழிப்புணர்வு ஊர்வலம்

திருச்செங்கோட்டில் விழிப்புணர்வு ஊர்வலம்

திருச்செங்கோட்டில் நடைபெற்ற குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்போம் பற்றிய விழிப்புணர்வு ஊர்வலத்தில் நகர்மன்ற தலைவர் பங்கேற்றார்.


திருச்செங்கோட்டில் நடைபெற்ற குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்போம் பற்றிய விழிப்புணர்வு ஊர்வலத்தில் நகர்மன்ற தலைவர் பங்கேற்றார்.
திருச்செங்கோடு நகராட்சி மலையடிவாரம் நடுநிலைப்பள்ளியில் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்போம் என்ற விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு கலந்துகொண்டு விழிப்புணர்வு ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.மேலும் பொதுமக்களுக்கு துண்டு பிரச்சனைகளை வழங்கி தங்களுடைய குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்து நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இவ் விழிப்புணர்வு ஊர்வலத்தில் நகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story