மனித நேய வார விழாவை முன்னிட்டு தீண்டாமை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

மனித நேய வார விழாவை முன்னிட்டு தீண்டாமை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

தீண்டாமை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி 

பெரம்பலூரில் மனித நேய வார விழாவை முன்னிட்டு தீண்டாமை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பெரம்பலூரில் மனித நேய வார விழாவை முன்னிட்டு தீண்டாமை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மனித நேய வார விழாவை முன்னிட்டு தீண்டாமை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி ஜனவரி 29ஆம் தேதி நடைபெற்றது. பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் துவங்கிய இப்பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல்பிரபு, கொடியசைத்து துவக்கி வைத்தார். வெங்கடேசபுரம், ரோவர்வளைவு, சங்குப்பேட்டை, கடைவீதி வழியாக பழைய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்த இந்த பேரணியில் கலந்து கொண்ட பள்ளி சாரண சாரணிய மாணவ மாணவிகள் தீண்டாமை விழிப்புணர்வு குறித்த பதாகைகளை கையில் ஏந்தியவாறும், விழிப்புணர்வு கோஷமிட்டு சென்றனர். இந்த பேரணியில் பள்ளி மாணவர்களுடன் சாரண ஆசிரியர்கள் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story