மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்கம் சார்பில் விழிப்புணர்வு பேரணி

தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்க 58- வது அமைப்பு தினத்தை முன்னிட்டு ரத்த தானம் மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

பிஎஸ்என்எல் அலுவலக முன்பு தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கம் - 58வது அமைப்பு தினத்தை ரத்த தானம் விழிப்புணர்வு பேரணி பி.ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது. சங்க அலுவலகத்தில் ஆர்.செல்வம் கிளைச் செயலாளர் TNMSRA சங்க கொடியை ஏற்றி வைத்தார்.மூத்த தொழிற்சங்க தலைவர் வி.பி.சிந்தன் அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. ஜி.நாகராஜன், மாநில பொருளாளர், குருதி கொடை விழிப்புணர்வு இரண்டு சக்கர வாகன பிரச்சார பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இப்பேரணி தருமபுரி நகர BSNL அலுவலகம் முன்பிருந்து சி.கே. சீனிவாசன் தெரு, ராஜகோபால் பூங்கா, தலைமை தபால் நிலையம், பைபாஸ் சாலை வழியாக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கியை சென்றடைந்தது. தமிழ்நாடு மருந்து விற்பனை பிரதமர் சங்கம் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.சிங்காரவேல், ஏ.பீட்டர், கே.நாராயணன், கோகுல்ராஜ், எம்.யுவராஜ், கே.ஆதிமூலம் மேலும் 50 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

குருதிக்கொடை வங்கியில் குருதி கொடை வழங்கப்பட்டது இதற்கான ஏற்பாடுகளை ஆர். செல்வம்,கிளை செயலாளர், தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கம். மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Tags

Next Story