சேலம் நகர கோட்டத்தின் சார்பில் மின்சார சிக்கனம் குறித்து விழிப்புணர்வு பேரணி

சேலம் நகர கோட்டத்தின் சார்பில் மின்சார சிக்கனம் குறித்து விழிப்புணர்வு பேரணி

மின் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு

சேலம் நகர கோட்டத்தின் சார்பில் மின்சார சிக்கனம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் வருடம் தோறும் டிசம்பர் 14-ம் தேதி முதல் டிசம்பர் 20-ம் தேதி வரை மின்சார சிக்கனம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி சேலம் மின் பகிர்மான மின்சாரவட்டம், டவுன் கோட்டத்தின் சார்பாக விழிப்புணர்வு பேரணி நடந்தது.

கோட்டை மைதானத்தில் தொடங்கிய பேரணியை மேற்பார்வை பொறியாளர் தண்டபாணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

அருகில் சேலம் டவுன் கோட்ட செயற்பொறியாளர் சுந்தரி உள்ளார். பேரணியில் நகரக்கோட்டத்தின் செயற்பொறியாளர்கள்,உதவி பொறியாளர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்துக்கொண்டு விழிப்புணர்வு தட்டிகளை ஏந்தி சென்றனர்.

Tags

Next Story