தென்காசியில் தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு பேரணி

தென்காசியில் தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு பேரணி
பைல் படம்
தென்காசி மாவட்டம் போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு மாத விழாவில் தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் தென்காசி வட்டார போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு மாத விழாவில் தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு இருந்து புறப்பட்ட பேரணியை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கண்ணன் துவக்கி வைத்தார். இந்த பேரணி புதிய பேருந்து நிலையம் வரை சென்று நிறைவடைந்தது. விழிப்புணர்வு பேரணியில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story