எடப்பாடியில் மின் சிக்கனம் குறித்த விழிப்புணர்வு பேரணி

எடப்பாடியில் மின் சிக்கனம் குறித்த விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி 

எடப்பாடியில் மின்சாரத்துறை சார்பில் மின் சிக்கனம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மேட்டூர் மின் பகிர்மான வட்டத்தின் எடப்பாடி கோட்டம் சார்பில் மின் சிக்கன வார விழாவை முன்னிட்டு நடைப்பெற்ற மின்சார சிக்கனம், சேமிப்பு மற்றும் பாதுகாப்பு குறிப்புகள் குறித்த விழிப்புணர்வு பேரணியை மேட்டூர் மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் தாரணி கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணி எடப்பாடி பேருந்து நிலையத்தில் தொடங்கி சேலம் பிரதான சாலை நைனாம்பட்டி வழியாக எடப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வரை மின்சாரத்துறை ஊழியர்கள் மின் சிக்கனம் குறித்த வாசகங்கள் எழுதிய பதாகைகளை கையில் ஏந்தியபடியும் ஒலிபெருக்கி மூலமும் விழிப்புணர்வை ஏற்படுத்திக்கொண்டுதுண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கியும் பேரணியாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இப்பேரணியில் மின்சாரத்துறையின் எடப்பாடி கோட்ட செயற்பொறியாளர் தமிழ்மணி, உதவி செயற்பொறியாளர்கள் சீனிவாசன் ரமேஷ்பாபு, மகேந்திரன் உட்பட மின்சாரத் துறை அதிகாரிகள், ஊழியர்கள் என பலரும் உடன் இருந்தனர்.

Tags

Next Story