சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி

சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி

பேரணியில் கலந்து கொண்டவர்கள் 

குமாரபாளையத்தில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவயல் கல்லூரி சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. கல்லூரி முதல்வர் ரேணுகா தலைமை வகித்தார். சாலை பாதுகாப்பு குறித்த விழுப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாதைகளை கைகளில் ஏந்தியவாறும், மாணவ, மாணவியர் கோஷங்கள் போட்டவாறும், விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்தவாறும் சென்றனர்.

கல்லூரி வளாகத்தில் துவங்கிய பேரணி, சேலம் சாலை, ஆனங்கூர் சாலை, பள்ளிபாளையம் சாலை, இடைப்பாடி சாலை உள்ளிட்ட பல பகுதிகள் வழியாக வந்து கல்லூரி வளாகத்தில் நிறைவு பெற்றது. பேராசிரியர்கள் ஞானதீபன், ரமேஷ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story