ஹெல்மெட் அணிய வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி

ஹெல்மெட் அணிய வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி

தூத்துக்குடியில் சாலைப் பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, ஹெல்மெட் அணிய வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 

தூத்துக்குடியில் சாலைப் பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, ஹெல்மெட் அணிய வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 
தூத்துக்குடியில் சாலைப் போக்குவரத்து வார விழாவையொட்டி இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக் கவசம் வலியுறுத்தி வாகனப் பேரணி நடந்தது. மில்லர்புரத்தில் துவங்கிய பேரணி பனிமய மாதா ஆலயம் வரை நடந்தது. மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய உறுப்பினர் எம்பவர் சங்கர் ஆகியோர் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தனர். மேயர் ஜெகன் பெரியசாமி, டவுண் ஏ.எஸ்.பி.கில்கர் சுப்பிரமணிய பாலசந்திரா, வட்டார போக்குவரத்து அதிகாரி விநாயகம், யங் இந்தியன் அமைப்பினர் மற்றும் ஓட்டுநர் பயிற்சி பள்ளி பணியாளர்கள் ஆகியோர் ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாகனத்தை ஓட்டி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மோட்டார் வாகன ஆய்வாளர் பெலிக்ஸன் மாசிலாமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story