மரம் வளர்ப்போம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் !

மரம் வளர்ப்போம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் !

கருத்தரங்கம்

திண்டுக்கல் பார்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மரம் நடுவிழா மற்றும் வனம் காப்போம் மரம் வளர்ப்போம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது .
உலக வனநாளை முன்னிட்டு திண்டுக்கல் சமூக வனக்கோட்டம் , கோட்டவன அலுவலர் மகேந்திரன் உத்தரவின்படி திண்டுக்கல் பார்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மரம் நடுவிழா மற்றும் வனம் காப்போம் மரம் வளர்ப்போம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது . விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். அழகர் கோயில் சமூக வளச்சரக அலுவலர் அன்பழகன், ஒட்டன்சத்திரம் சமூக வனச்சரக அலுவலர் சிவராம், வேடசந்தூர் சமூக வனச்சரக அலுவலர் நவீன் குமார் , நிலக்கோட்டை சமூக வனச்சரகர் அருண்குமார் ,பழனி சமூக வனச்சகர் மகேஷ், ஆத்தூர் சமூக வனச்சரகர் கார்வேந்தன் ,நத்தம் சமூக வனச்சரகர் சக்திவேல் செந்துறை சமூக வனச்சரகர் ஞான பாலமுருகன் ஆகியோர் தலைமை ஏற்றனர் .

Tags

Next Story