அய்யா வைகுண்டர் வாவை நற்பதியில் துவையல் தவசு விழா

அய்யா வைகுண்டர் வாவை நற்பதியில் துவையல் தவசு விழா

அய்யா வைகுண்டர் வாவை நற்பதியில் துவையல் தவசு விழா

கன்னியாகுமரி மாவட்டம், ஆமணக்கன்விளை பகுதியில் உள்ள அய்யா வைகுண்டர் வாவை நற்பதியில் துவையல் தவசு விழா நடைப்பெற்றது.

கன்னியாகுமரி மாவட்டம், ஆமணக்கன்விளை கடற்கரையில் அய்யா வைகுண்ட சாமியின் வாவை நற்பதி அமைந்துள்ளது இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாதம் முதல் வெள்ளிக்கிழமை அய்யாவின் துவையல் தவசை நினைவு கூறும் வகையில் துவையல் தவம் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான விழா நடந்தது விழாவிற்கு அய்யா வழி சமய தலைவர் குரு மகா சன்னிதானம் பால பிரஜாபதி அடிகளார் தலைமை தாங்கினார். வாகை நற்பதியின் தர்மகத்தா பாலசந்தர், பால சுரேஷ் , அன்புவனம் நிர்வாகி பேராசிரியர் ஆர். தர்ம ரஜினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆரல்வாய்மொழி ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆதித்தன் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் அய்யாவின் துவையல் தவம் குறித்து பால பிரஜாபதி அடிகளார் பேசினார் தொடர்ந்து துவயல்தவம், தர்மங்களும் நடந்தது நிகழ்ச்சி ஏற்பாடுகளை வாகைபதி தர்மகத்தா கள் செய்திருந்தனர் நிகழ்ச்சியில் நெல்லை மற்றும் அம்பாசமுத்திரம் பகுதியில் உள்ள அய்யாவழி மக்களும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story