அயோத்தி கும்பாபிஷேகம்; அனுமன் வேடத்தில் அழைப்பிதழ் விநியோகம்

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, புதுக்கோட்டையில் அனுமன் வேடமணிந்தவாறு அழைப்பிதழ்கள் விநியோகிக்கப்பட்டன.

அயோத்தியில் ராமர் கோவில் வருகிற 22ஆம் தேதி திறக்கப்படுகிறது அதனை முன்னிட்டு புதுக்கோட்டையில் ஹனுமன் வேடமணிந்து வரும் 22ஆம் தேதி அனைத்து இல்லங்களிலும் விளக்கேற்றுவோம் என்ற கோஷத்துடன் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது.

புதுக்கோட்டையில் குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆர். ஜி. ஆனந்த், முன்னாள் திட்ட இயக்குனர் ஏ .வி சி .சி .கணேசன் ஆகியோர் ராமர் ஜென்ம பூமி அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு வீடுகள் தோறும் விளக்கேற்ற அழைப்பிதழ் வழங்க அனுமார் வேடமிட்டவருடன் ஊர்வலமாக சென்று நகர் முழுவதும் அழைப்பிதழ் வழங்கினார்கள். அது மட்டுமல்லாது பேருந்தில் சென்றவர்களுக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டன பின்னர் புதுக்கோட்டை நகரில் முக்கிய விஐபிகளை நேரில் சந்தித்து அழைப்பிதழ்களும் அதே போல் பல்வேறு ஆலயங்களுக்கு சென்று ஆலயங்களில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கும் அழைப்புகள் கொடுக்கப்பட்டன முன்னதாக புதுக்கோட்டை திலகர்திடலிருந்து நகரின் முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இந்நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள் சென்றனர்.

Tags

Next Story