அயோத்தி கோவில் கும்பாபிஷேகம்; ராசிபுரத்தில் அன்னதானம்

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் முன்னிட்டு, ராசிபுரம் பட்டை பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நடந்தது.

நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில், அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் பால இராமர் சிலை பிரதிஷ்டையை முன்னிட்டு, பாஜக மாநில துணைத் தலைவர் டாக்டர் கே.பி. இராமலிங்கம், பட்டை பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து, அன்னதானம் வழங்கப்பட்டது. அயோத்தியில் இராமர் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் பால இராமர் சிலை பிரதிஷ்டியை முன்னிட்டு, நாடு முழுவதும் பக்தி வழிபாடுகள் நடைபெற்றன. இதன்படி நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில், அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் டாக்டர் கே.பி. இராமலிங்கம் தலைமையில், பட்டை பெருமாள் பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். இதில், உள்ளூர் பிரமுகர்கள், பக்தர்கள், கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் உட்பட பலரும் கலந்துகொண்டு அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் பால இராமர் சிலை பிரதிஷ்டை காணொளி காட்சி மூலம் பார்வையிட்டனர். மேலும் பிரதமர் ஆற்றிய உரையையும் அவர்கள் பார்வையிட்டனர். இதனைத் தொடர்ந்து பாஜக மாநில துணைத்தலைவர் டாக்டர் கே.பி. இராமலிங்கம் மற்றும் கட்சி நிர்வாகிகள் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

Tags

Next Story