சிவகாசியில் அய்யா வைகுண்டரின் அவதார திருநாள் விழா

சிவகாசியில் அய்யா வைகுண்டரின் அவதார திருநாள் விழா

அய்யா வைகுண்டர் திருவிழா

சிவகாசியில் அய்யா வைகுண்டரின் அவதார திருநாள் விழாவை முன்னிட்டு அன்னதான நிகழ்ச்சி நடைப்பெற்றது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி - திருத்தங்கல் சாலையில் உள்ள ஸ்ரீநாராயணசுவாமி கோவிலில், அய்யா வைகுண்டர் சுவாமியின் அவதார திருநாள் விழா சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

முன்னதாக, அய்யா வைகுண்டர் பதிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.தொடர்ந்து, அய்யா வைகுண்டர் ஸ்தம்பத்திற்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, அய்யா வைகுண்டரை தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags

Next Story