அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா

அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா

புரவி எடுப்பு திருவிழா 

ஸ்ரீ சித்திவிநாயகர் சுவாமி திருக்கோவில் மற்றும் அருள்மிகு ஸ்ரீ வஞ்சியம்மன் திருக்கோவில் நூதன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

மதுரை மாவட்டம், மேலூர் வட்டம் வஞ்சி நகரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சித்திவிநாயகர் சுவாமி திருக்கோவில் மற்றும் அருள்மிகு ஸ்ரீ வஞ்சியம்மன் திருக்கோவில் நூதன மகா கும்பாபிஷேக விழா மற்றும் ஸ்ரீ அய்யனார் சுவாமி புரவி எடுப்பு விழா நாட்டாமை கண்ணன் கரைகாரர்கள் ராசமூர்த்தி, வீரமணி ஆகியோர் தலைமையில் கணபதி ஹோமம், வாஸ்து ஹோமம், இரண்டு கால யாகசாலை பூஜைகளுடன் தொடங்கி சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க எடுத்துவரப்பட்ட புனித நீர் கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகமானது மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து மாபெரும் அன்னதானம் நடைபெற்றது இந்த அன்னதானத்தில் 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர், இந்நிகழ்ச்சி ஏற்பாட்டினை வஞ்சிநகரம் கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்,

Tags

Next Story