பாபநாசம் புனித செபஸ்தியார் நடுநிலை பள்ளி ஆண்டு விழா

பாபநாசம் புனித செபஸ்தியார் நடுநிலை பள்ளி ஆண்டு விழா

ஆண்டு விழா

தஞ்சாவூர் மாவட்டம்,பாபநாசம் புனித செபஸ்தியார் நடுநிலை பள்ளி ஆண்டு விழாவில் மாணவர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் உள்ள புனித செபஸ்தியார் நடுநிலை பள்ளியில் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. விழாவில் பள்ளி தாளாளர்.கோஸ்மான் ஆரோக்கியராஜ் தலைமை வகித்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார் இணை பங்குத்தந்தை தார்த்தீஸ், திருத்தொண்டர் வில்லியம் கவாஸ்கர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பள்ளி இடைநிலை ஆசிரியர் ஜெனிபர் ஸ்டெல்லா மேரி அனைவரையும் வரவேற்று பேசினார்.

பள்ளி தலைமை ஆசிரியர் பால்ராஜ் ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில் வட்டார கல்வி அலுவலர்கள் மணிகண்டன், ஜெய மீனா வட்டார வளமைய மேற்பார்வையாளர் முருகன், பாபநாசம் பாஸ்டின் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி தாளாளர் மார்கிரேட் சில்வியா ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஜோஸ்பின் மேரி வாழ்த்துரை வழங்கினார்கள். பள்ளியில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. விழாவில் பள்ளி ஆசிரியர் ஆசிரியைகள், மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். விழா நிகழ்ச்சிகளை உடற்கல்வி ஆசிரியர் ஆபிரகாம் ஆசிரியை ரூபி அருள் சகாயமேரி ஆகியோர் தொகுத்து வழங்கினர் முடிவில் ஆசிரியர் பாபு நன்றி கூறினார் .

Tags

Read MoreRead Less
Next Story