பாபா் மசூதி இடிப்பு தினம் - தூத்துக்குடி ரயில் நிலையத்தில் சோதனை

பாபா் மசூதி இடிப்பு தினம் - தூத்துக்குடி ரயில் நிலையத்தில் சோதனை

பயணிகளிடம் சோதனை 

பாபா் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸாா் வெடிகுண்டு சோதனையில் ஈடுபட்டனா்.
டிச. 6ஆம் தேதி பாபா் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி ரயில் நிலையத்தில் இருப்புப் பாதை காவல் உதவி ஆய்வாளா் எம். மகா கிருஷ்ணன் தலைமையில் மெட்டல் டிடெக்டா் கருவியுடன் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது. இதில், மைசூரூ செல்லும் விரைவு ரயில், பயணிகளின் உடைமைகள், பாா்சல் அலுவலகம், இருசக்கர வாகன காப்பகம் ஆகியவற்றில் இச்சோதனை நடத்தப்பட்டது. இதில், காவல் சிறப்பு உதவி ஆய்வாளா்கள் நாராயணன், முருகன் மற்றும் போலீஸாா் ஈடுபட்டனா்.

Tags

Next Story