கழிவு நீர் கால்வாயில் பெண் சிசு சடலம் - காவல் துறையினர் விசாரணை

கழிவு நீர் கால்வாயில் பெண் சிசு சடலம் - காவல் துறையினர் விசாரணை

பெண் சிசு சடலம் மீட்கப்பட்ட பகுதி 

மதுரை செபாஸ்டின் நகர் சர்ச் அருகே கழிவுநீர் கால்வாயில் கிடந்த பெண் சிசுவின் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை மாநகரில் இருந்து கோச்சடை நோக்கி செல்லக்கூடிய பிரதான சாலை பகுதியில் அமைந்துள்ளது மதுரை முடக்கு சாலை. இதன் அருகே மதுரையின் முக்கிய மாநகர் பகுதியான பெத்தானியாபுரம் குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த நிலையில்., இப்பகுதியின் நடுவே செபாஸ்டின் நகர் சர்ச் ஒன்று உள்ளது. அதன் முன்பு உள்ள சாக்கடை கால்வாயில் பிறந்த குழந்தையின் உடல் கழிவு நீர் கால்வாயில் இறந்த நிலையில் கிடந்ததை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் அடிப்படையில் இறந்த குழந்தையின் உடலை மீட்ட கரிமேடு காவல்துறையினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். கழிவுநீர் கால்வாயில் கிடந்தது பெண் குழந்தை என்றும் காலை 10 மணிக்கு மேல் அந்த பகுதியில் போடப்பட்டிருக்கலாம் என அக்கம்பக்கத்தினர் புகார் தெரிவிக்கவே காவல் துறையினர் அப்பகுதியில் இருக்கக்கூடிய கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து., இப்பகுதியில் கர்ப்பிணி பெண்கள் விவரம் குறித்தும், சமீபத்தில் பிரசவித்த பெண்கள் விவரம் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் கரிமேடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story