புறக்கடை நன்னீர் அலங்கார மீன் வளர்ப்புமும் தொழில் பயிற்சி!

புறக்கடை நன்னீர் அலங்கார மீன் வளர்ப்புமும் தொழில் பயிற்சி!

 தொழில் பயிற்சி

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் "புறக்கடை நன்னீர் அலங்கார மீன் வளர்ப்புமும் தொழில் முனைதலும்” குறித்த ஒரு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிலதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தூத்துக்குடியில் "புறக்கடை நன்னீர் அலங்கார மீன் வளர்ப்புமும்; தொழில்முனைதலும்” என்ற தலைப்பில் ஒரு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சியானது இன்று தூத்துக்குடி எ.எம், பட்டி தூத்துக்குடியில் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் மொத்தம் 35 ஊரக மகளிருக்கு வழங்கப்பட்டது.

இப்பயிற்சியினை மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின், மீன்வள விரிவாக்கம், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை நடத்தியது. உதவிப்பேராசிரியர் கோ. அருள் ஓளி, மற்றும் வே. கோமதி, குட்டியிடும் அலங்கார மீன்கள் மற்றும் அவற்றின் இனப்பெருக்கத் தொழில் நுட்பம், முட்டையிடும் அலங்கார மீன்கள் மற்றும் அவற்றின் இனப்பெருக்கத் தொழில் நுட்பம், அலங்கார மீன் பண்ணை இடத்தேர்வு, கட்டமைப்பு மற்றும் அலங்கார மீன்வளர்ப்புக்கான உபகரணங்கள், அலங்கார மீன்வளர்ப்பில் நீர்த்தர மேலாண்மை, மீன்வளர்ப்பில் அலங்கார மீன்வளர்ப்பில் சிறந்த மேலாண்மை முறைகள், வர்த்தகம் மற்றும் சந்தைப்படுத்துதல் போன்றவற்றை குறித்த விளக்கவுரை அளித்தனர்கள்.

Tags

Next Story