திண்டுக்கல் அருகே மருத்துவ கழிவுகளால் கடும் துர்நாற்றம்

திண்டுக்கல் அருகே மருத்துவ கழிவுகளால் கடும் துர்நாற்றம்
திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு பேரூராட்சி அய்யம்பாளையம் அருகே மர்ம வாகனத்தில் கொண்டு வந்து மருத்துவக் கழிவுகளை கொட்டிச் சென்றதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது.

தாடிக்கொம்பு பேரூராட்சி லட்சுமணன்பட்டி நால்ரோட்டில் இருந்து அய்யம்பாளையம் செல்லும் சாலையின் ஓரத்தில் கண்டெய்னர் லாரி ஒன்று வியாழக்கிழமைஇரவு நின்று கொண்டிருந்தது. அவ்வழியாக சென்ற இளைஞர்கள் எதற்காக லாரி இங்கே நிற்கிறது என்று கேட்டுள்ளனர்.

அதற்கு கிளீனர் வழி மாறி வந்து விட்டோம் திருப்புவதற்காக இங்கே நிறுத்தி உள்ளோம் என்று கூறியுள்ளார். இந்நிலையில் இன்று காலை 11 மணியளவில் இளைஞர்கள் வந்து பார்த்த பொழுது மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது தெரியவந்தது. இதில் ரத்த கரையுடன் ஏராளமான கையுறைகளும் மருத்துவமனை ஊசி, ரத்த கரையுடன் கூடிய பாண்டேஜ்,

மற்றும் ஏராளமான மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது.இதிலிருந்து கடும் துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக செல்வோர்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.

Tags

Next Story