பெரம்பலூர் மாவட்ட பா.ஜ.க தலைவர் ஜாமீன் மனு தள்ளுபடி

பெரம்பலூர் மாவட்ட பா.ஜ.க தலைவர் ஜாமீன் மனு தள்ளுபடி

கோப்பு படம் 

பெரம்பலூர் மாவட்ட பா.ஜ.க தலைவர் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு உதவி பெரும் தனியார் பள்ளி அனுபவத்திலிருந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்து பாஜக கட்சியின் கொடிக்கம்பம் நட்ட, வழக்கின் குற்றவாளியான பெரம்பலூர் மாவட்ட பாஜக தலைவர் செல்வராஜ், நீதிமன்ற பிணையில் வெளிவர, ஜாமீன் மனு அளித்திருந்த நிலையில்,

இவர் தொடர்ந்து இதுபோன்று மத நல்லிணக்கத்தை கெடுக்கும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாலும் இவர் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாலும் மீண்டும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல் இருக்க இவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிடுமாறு காவல்துறை சார்பாக மங்களமேடு காவல் ஆய்வாளர் கேட்டுக் கொண்டதன் பேரில்,

வேப்பந்தட்டை குற்றவியல் நீதித்துறை நடுவர் வழக்கின் குற்றவாளியான பாஜக மாவட்ட தலைவர் செல்வராஜ் ஜாமீன் மனுவை ஜனவரி 24ஆம் தேதி மாலை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

Tags

Next Story