கன்னியாகுமரியில் தூண்டில் பாலம் சேதம்: எம்பி ஆய்வு

கன்னியாகுமரியில் தூண்டில் பாலம் சேதம்: எம்பி ஆய்வு
சேதமடைந்த தூண்டில் வளைவை பார்வையிட்ட எம்.பி
கன்னியாகுமரியில் தூண்டில் பாலம் சேதமடைந்ததை விஜய் வசந்த் எம்.பி பார்வையிட்டார்.

குமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை 47 மீனவர்கள் உள்ளன இதில் பல பகுதிகளில் தூண்டில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கன்னியாகுமரியில் வாவத்துறை மீனவர் கிராமத்தில் அமைக்கப்பட்ட தூண்டில் வளைவு பாலம் அமைத்து 10 ஆண்டுகள் கடந்து விட்டது.

இந்த பகுதி புனித ஆரோக்கியநாதர் தேவாலயம் மற்றும் கடல் நடுவே சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை பாறைக்கு அருகாமையில் உள்ள தூண்டில் பாலத்தில், கடல் அலைகள் எப்போதும் வேகமாக மோதும் பகுதியில் உள்ள பாறைகள் அகன்று சிதறி உள்ள நிலையில்,

வாவத்துறை மீனவ மக்களின் அழைப்பை ஏற்று பாதிக்கப்பட்டுள்ள தூண்டில் பாலம் பகுதிகளை குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பார்வையிட்டார்.

வாவத்துறை தேவாலய பங்கு தந்தை லிகோரியஸ், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், அந்த பகுதியின் வார்டு உறுப்பினர் ஆட்லின், முன்னாள் வார்ட் உறுப்பினர் தாமஸ், ஊர் தலைவர் வர்க்கீஸ், மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் உடன் இருந்தனர். தொடர்ந்து கோரிக்கை மனு அளித்தனர்.

Tags

Next Story