ஓசியில் ஸ்வீட் கேட்டு பேக்கரி கண்ணாடி உடைப்பு - போலீசார் விசாரணை

ஓசியில் ஸ்வீட் கேட்டு பேக்கரி கண்ணாடி உடைப்பு - போலீசார் விசாரணை

சம்பவம் நடந்த பேக்கரி 

ஜோலார்பேட்டை அருகே பேக்கரியில் ஓசியில் ஸ்வீட் கேட்டு தர மறுத்ததால் கடையின் கண்ணாடிகளை உடைத்தவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
ஜோலார்பேட்டை அடுத்த புத்துக்கோயில் பகுதியை சேர்ந்த முருகன் மகன் ஜெயக்குமார். இவர் ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள வக்கணம்பட்டி கிராமத்தில் நியூ ஐஸ்வர்யா ஸ்வீட் கடை நடத்தி வருகிறார் இந்நிலையில் ஜோலார்பேட்டை குப்புசாமி திருப் பகுதியில் வசித்து வரும் கண்ணன் மகன் பிரகாஷ் இவர் ஓசியில் ஸ்வீட் கேட்டு உள்ளார். கொடுக்க மறுத்ததால் கண்ணாடிகளை உடைத்து தப்பி ஓடி உள்ளார் மடக்கி பிடித்த அப்பகுதி மக்கள் ஜோலார்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story