பரமத்தி வேலூர் தர்காவில் பக்ரீத் பண்டிகை

பரமத்தி வேலூர் தர்காவில் பக்ரீத் பண்டிகை

பரமத்தி வேலூர் ஹஜ்ரத் சஹன்சா அவுலியா தர்காவில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.


பரமத்தி வேலூர் ஹஜ்ரத் சஹன்சா அவுலியா தர்காவில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் ஹஜ்ரத் சஹன்சா அவுலியா தர்காவில் இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஏராளமான இஸ்லாமியர்கள் புத்தாண்டை உடுத்தி கூட்டுத் தொழுகையில் ஈடுபட்டு ஒருவரையொருவர் கட்டித்தழுவி பக்ரீத் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். பரமத்திவேலூர் ஹஜ்ரத் சகன்சா அவுலியா தர்காவில், பக்ரீத் பண்டிகை திருநாளை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது.

முன்னதாக தர்காவில் இருந்து நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் ஊர்வலமாக புறப்பட்டு பஸ் நிலையம் அருகே வரை சென்று மீண்டும் பள்ளிவாசலை வந்தடைந்தனர். தொடர்ந்து பள்ளிவாசல் மைதானத்தில் சிறப்பு தொழுகையை தொடர்ந்து இஸ்லாமியர்கள் ஒருவரையொருவர் கட்டித்தழுவி பக்ரீத் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.இதில் வேலூர் , பரமத்தி, பாலம் பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இஸ்லாமியகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story