பாலேகுளி –சந்தூர் கால்வாய் தொட்டிப்பாலத்தை திறந்து வைத்த எம்.எல்.ஏ

பாலேகுளி –சந்தூர் கால்வாய்  தொட்டிப்பாலத்தை திறந்து வைத்த எம்.எல்.ஏ

தொட்டிப்பாலம் திறப்பு 

பாலேகுளி –சந்தூர் கால்வாயில் அமைக்கப்பட்ட மண்கரை தொட்டிப்பாலத்தை எம்.எல்.ஏ மதியழகன் திறந்து வைத்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட போச்சம்பள்ளி வட்டத்தில் பாலேபள்ளி கிராம பகுதியில் தமிழ்நாடு முதலமைச்சர், ஆணைக்கிணங்க, பாலேகுளி –சந்தூர் கால்வாயிலுள்ள மண்கரை தொட்டிப்பாலத்தை உறுதிபடுத்துதல் மற்றும் குழாய்பதித்து தண்ணீர் கொண்டு செல்லும் பணிக்கு இருபுறமும் 1 அடி உயர்த்தி ரூ: 221 இலட்சம் மதிப்பீட்டில் தொட்டி பாலம் கட்டும் பணி நடைபெற்றது.

நாகோஜனஅள்ளி, வீரமலை, விளங்காமுடி, திம்மநாயக்கன்பட்டி, காட்டாகரம், ஆகிய ஐந்து ஊராட்சிகளில் 460 ஏக்கர் நிலம் நேரடியாகவும்,395 ஏக்கர் நிலம் மறைமுகமாகவும் பாசன வசதி பெறும் வகையில் கட்டி முடிக்கப்பட்ட இந்த தொட்டி பாலத்தை பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் மக்களின் பயன்பாட்டிற்குகாக திறந்து வைத்தார். இதில் திமுக நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story