கண்ணாடி ஷோகேசை கையால் குத்தி உடைத்தவர் பலி

கண்ணாடி ஷோகேசை கையால் குத்தி உடைத்தவர் பலி

கண்ணாடி ஷோகேசை கையால் குத்தி உடைத்தவர் பலி

சேலம் அருகே பரிதாபம்- கண்ணாடி ஷோகேசை கையால் குத்தி உடைத்தவர் பலி. இதுகுறித்த தகவலின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் பாறைக்காடு இன்டேன் கேஸ் குடோன் பகுதியை சேர்ந்தவர் சங்கர்(40). வெள்ளி பொருட்களுக்கு மெருகுபோடும் பட்டறை வைத்துள்ளார். குடிபழக்கம் கொண்ட சங்கர் நேற்று மாலை வீட்டிலிருந்து வெளியே வந்து கடையின் கண்ணாடி ஷோகேசை கையால் குத்தி உடைத்தார். அப்போது கை ஷோகேசுக்குள் சிக்கி கொண்டது. போதையில் இருந்த அவர் கையை வேகமாக வெளியே இழுத்தார். இதில் கையில் உள்ள முக்கியமான நரம்புகள் அனைத்தும் வெட்டுப்பட்டு ரத்தம் கொட்டியது. அளவுக்கு அதிகமாக ரத்தம் வெளியேறியதால், மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை ஆம்புலன்சில் ஏற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். இங்கு அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த தகவலின்பேரில் சூரமங்கலம் போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்துபோன சங்கருக்கு மனைவியும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story