மேற்கூரையில் அரசமர செடி - பாழாகும் ரேஷன் கடை கட்டிடம்

மேற்கூரையில் அரசமர செடி - பாழாகும் ரேஷன் கடை கட்டிடம்

மேற்கூரையில் அரசமர செடி

காஞ்சிபுரம் கருக்கினில் அமர்ந்தவள் அம்மன் கோவில் தெருவில் உள்ள ரேஷன் கடை கட்டிடத்தின் மேற்கூரையில் வளர்ந்துள்ள அரசமர செடிகளை அகற்றி , கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் கருக்கினில் அமர்ந்தவள் அம்மன் கோவில் தெருவில் செயல்படும் ரேஷன் கடையில், 1,033 கார்டுதாரர்களுக்கு கார்டின் தன்மைக்கேற்ப அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ரேஷன் கடை கட்டடம் முறையாக பராமரிக்காததால், கட்டடத்தின் கூரையில் இரு இடங்களில் அரசமர செடிகள் வளர்ந்துள்ளன. இச்செடிகள் வேரூன்றி வளர்வதால், சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது. நாளடைவில், ரேஷன் கடை கட்டடம் முழுதும் வலுவிழக்கும் சூழல் உள்ளது. எனவே, ரேஷன் கடை கூரையில் செழித்து வளர்ந்து வரும் அரச மரச்செடிகளை வேருடன் அகற்றி, விரிசல் ஏற்பட்டுள்ள பகுதியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story