நாமக்கல் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் ட்ரோன்கள் பறக்க தடை

நாமக்கல் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் ட்ரோன்கள் பறக்க தடை

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

நாமக்கல் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற பொதுத் தேர்தலில் 16.நாமக்கல் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்கு பதிவு இயந்திரங்கள் திருச்செங்கோடு வட்டம், இளையாம்பாளையம் கிராமம், விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களை சுற்றி வாக்குகள் எண்ணும் பணி முடியும் வரை Drone-கள் பறக்க தடை விதித்து உத்தரவிடப்படுகிறது என நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்.

Tags

Next Story