துப்பாக்கி வைத்திருக்க தடை - ஆட்சியர் சங்கீதா அறிவிப்பு !

துப்பாக்கி வைத்திருக்க தடை - ஆட்சியர் சங்கீதா அறிவிப்பு !

 துப்பாக்கி

பாராளுமன்ற தேர்தல் - 2024 அறிவிப்பு வெளியாகி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் துப்பாக்கி உரிமம் பெற்றவர்கள் துப்பாக்கி வைத்திருக்க தடை என ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தல் - 2024 அறிவிப்பு வெளியாகி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை உரிமம் பெற்ற துப்பாக்கிகள் எடுத்து செல்வதற்கு தடையாணை அமலுக்கு வந்துள்ளது, எனவே, மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து உரிமம் பெற்ற துப்பாக்கிகளின் உரிமையாளர்களும் தங்களது துப்பாக்கிகளை தங்களின் இருப்பிடத்தின் அருகாமையில் உள்ள காவல் நிலையங்களில் பாதுகாப்பாக ஒப்படைப்பு செய்து உரிய ஒப்புதல் சீட்டு பெற்றுகொள்ள வேண்டும். தேர்தல் முடிவுகள் வெளியான தினத்திலிருந்து ஒரு வாரத்திற்கு பின்னர், தங்களது துப்பாக்கிகளை காவல் நிலையத்திலிருந்து திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story