சத்தியமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாழை ஏலம்

சத்தியமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாழை ஏலம்

வாழை ஏலம் (பைல் படம்)

சத்தியமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடந்த ஏலத்தில் ஒரு தார் செவ்வாழை ரூ.1190 க்கு விற்பனையானது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று வாழைத்தார்கள் ஏலம் நடந்தது இதில் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் வாழைத்தார்கள் கொண்டு வந்தனர் அதனை வாங்குவதற்காக திருப்பூர் சேலம் கரூர் நாமக்கல் பொள்ளாச்சி போன்ற மாவட்டங்களில் இருந்து வந்து வியாபாரிகள் வாங்கிச் சென்றனர்

தார் விலை: செவ்வாழை அதிக விலை : 1190 குறைந்த விலை: 140 தேன்வாழை அதிகவிலை: 680 குறைந்தவிலை:170 ரஸ்தாளி அதிகவிலை: 360 குறைந்தவிலை:100 பூவன் அதிகவிலை: 690 குறைந்தவிலை:150 கிலோ விலை: கதளி அதிகவிலை: 51 குறைந்தவிலை:25 நேந்திரன் அதிகவிலை: 44 குறைந்தவிலை:30 விற்பனை நடைபெற்றதாக விற்பனைக்கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.



Tags

Next Story