பிள்ளையார்பட்டியில் வங்கியில் நகைகள் திருட்டு: நகை மதிப்பீட்டாளர் கைது

பிள்ளையார்பட்டியில் வங்கியில் நகைகள் திருட்டு: நகை மதிப்பீட்டாளர் கைது

கைதான நகை மதிபிட்டளர்

பிள்ளையார்பட்டியில் வங்கியில் நகைகளை திருடிய நகை மதிப்பீட்டாளரை போலீசார் கைது செய்தனர்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி பகுதியில் இந்தியன் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த இந்தியன் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக தென்மாபட்டு பகுதியைச் சேர்ந்த நாராயணகுமார் பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில் பொதுமக்கள் தங்கள் குடும்ப சூழ்நிலைக்காக வங்கியில் நகைகளை அடகு வைப்பது வழக்கம். அங்கு அடகுக்கு வரும் நகைகளை நாராயணகுமார் சிறிது சிறிதாக நகையில் உள்ள பாகங்களை திருடியதாக கூறப்படுகிறது. அதன் மதிப்பு ரூபாய் 11 லட்சத்தி 13 ஆயிரத்து 685 என கூறப்படும் நிலையில் இந்தியன் வங்கி மேலாளர்,

சரத்குமார் என்பவர் நகை திருட்டு சம்பவம் குறித்து சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சங்கீதா வழக்கு பதிவு செய்து நாராயணகுமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags

Next Story