சேலத்தில் வங்கி மேலாளர் வீட்டில் நகை பணம் திருட்டு !

சேலத்தில் வங்கி மேலாளர் வீட்டில் நகை பணம் திருட்டு !

 நகை பணம் திருட்டு

சேலத்தில் வங்கி மேலாளர் வீட்டில் நகை, பணம் திருட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் கன்னங்குறிச்சி, புதுஏரி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கமல். இவர் ஒரு வங்கியில் சீனியர் மேலாளராக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் நாமக்கல் கவுண்டிபாளையத்தில் நடைபெற்ற திருவிழாவிற்கு சென்று விட்டு நேற்று முன்தினம் வீட்டுக்கு வந்தார். அப்போது பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். பீரோவில் வைத்து இருந்த 6 பவுன் நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து அவர் கன்னங்குறிச்சி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story