தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்றவர் கைது

தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்றவர் கைது

லாட்டரி டிக்கெட் விற்றவர் கைது

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே ஒய் ரோடு பகுதியில் உள்ள டீக்கடையில் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம் ,நம்பர் 1 டோல்கேட் பகுதியில் கொள்ளிடம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நம்பர் 1 டோல்கேட் ஒய் ரோடு பகுதியில் உள்ள டீக்கடையில் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனை செய்வது போலீசாருக்கு தெரிய வந்தது.

அவரைப் பிடித்து விசாரணை செய்ததில் நம்பர் 1 டோல்கேட் அருகே தாளக்குடி வடக்குத் தெருவை சேர்ந்த 44 வயதான விஜயகுமார் என தெரிய வந்தது. பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்த கொள்ளிடம் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story