தஞ்சையில் வழக்கறிஞர்கள் சங்கம் மாவட்டக்குழு கூட்டம் 

தஞ்சையில் வழக்கறிஞர்கள் சங்கம் மாவட்டக்குழு கூட்டம் 
மாவட்ட குழு கூட்டம்
தஞ்சாவூரில் நடைபெற்ற வழக்கறிஞர்கள் சங்க கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின், தஞ்சாவூர் மாவட்டக் குழு கூட்டம் மாவட்டத் தலைவர் கே.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. இதில், மாநிலச் செயலாளர் வெ.ஜீவகுமார், மாவட்டச் செயலாளர் எம்.கே.சேகர், மாவட்டப் பொருளாளர் ஏ.அருணா தேவி, சசிகுமார், தங்கமணி, உமர் முக்தர், கீர்த்தனா, லோகேஸ்வரன் மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், "உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்கக் கோரி மதுரையில் வருகின்ற பிப்ரவரி 24ஆம் தேதி அன்று நடைபெறவுள்ள அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் தமிழ் மாநில சிறப்பு மாநாட்டில் தஞ்சையில் இருந்து பெருவாரியான வழக்கறிஞர்கள் கலந்து கொள்வது என முடிவெடுக்கப்பட்டது.

மேலும் மார்ச் 8ஆம் தேதி சர்வதேச பெண்கள் தினத்தில் தஞ்சையில் சங்கத்தின் மாவட்ட பெண்கள் உபக்குழு அமைத்து சிறப்பு கருத்தரங்கம் நடத்துவது, ஏப்ரல் 14ஆம் தேதி டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளில் இலவச சட்ட உதவி முகாம் நடத்துவது" என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags

Next Story